ஸ்டெர்லைட் கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கு: வேதாந்தா நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

ஸ்டெர்லைட் ஆலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசும், வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பதாக, பொதுமக்கள் போராட்டம், அவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையைக் கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக அரசு மூடி உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளை அகற்ற உத்தரவிடக் கோரி, பேராசிரியர் பாத்திமா தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மனுவுக்குத் தமிழக அரசும் மற்றும் வேதாந்தா நிறுவனமும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 5 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த வழக்கும், தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஆக. 17) விசாரணைக்கு வந்தது.

அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே ஆலையை மூட வேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்து அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தது. மேலும், உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும், அது சம்பந்தமாக முறையீடு செய்து, வழக்கை முன்கூட்டியே பட்டியலிட கோரிக்கை வைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்