இணை பேராசிரியர்களாகப் பணிபுரியும் 157 டாக்டர்களுக்கு பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவரும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான டாக்டர் கே.செந்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ’தி இந்து’விடம் கூறியதாவது:
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இணை பேராசிரியர்களாகப் பணிபுரியும் 157 டாக்டர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார்கள். இதற்காக முதல்வருக்கு அனைத்து டாக்டர்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல் மீதமுள்ள 110 இணை பேராசிரியர்களுக்கும் பேராசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கே.செந்தில் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago