தமிழகத்தில் 66 சதவீதம் பேருக்குகரோனாவுக்கு எதிரான நோய்எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தலைமையிலான குழுவினர், தமிழகத்தில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் பொதுமக்களிடம் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆய்வை நடத்தி வருகின்றனர்.
2020 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்த முதல்கட்ட ஆய்வில் 32 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் இருந்தது. 2-ம் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்தஆய்வில் 29 சதவீதம் பேருக்கு மட்டுமே கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் இருந்தது.
இதையடுத்து, 3-ம் கட்ட ஆய்வுகடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்றது. இதில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் என மாநிலம் முழுவதும் 888பகுதிகளில் 26,610 பேரின் ரத்தமாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில்17,624 பேர் (66.2 சதவீதம்) பேருக்குகரோனாவுக்கு எதிரான நோய்எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது.
அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்புத் திறன் உள்ளது. தமிழகத்தில் 1.60 கோடி பேருக்குமேல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மேலும், 25 லட்சம் பேருக்கு மேல் தொற்றால்பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர். இதுவே நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago