நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை, மார்கண்டேய அணை குறித்து மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்
கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சினை அரை நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளது. காவிரி நீர் பிரச்சினை இருக்கும்போதே கர்நாடகா தனது அத்துமீறலைத் தொடர்ந்து செய்து வருகிறது. காவிரி நீர்ப்பாதையில் மேகதாது அணை கட்டுவது தற்போது பெங்களூருவுக்குத் தண்ணீர் தேவை என்பதற்காக அணை கட்டுவது எனப் பல அத்துமீறும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுகுறித்துத் தமிழகம் பல முறை மத்திய அரசிடம் முறையிட்டும் அதற்கான தீர்வு வரவில்லை. இந்நிலையில் மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், ''மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது. இதனால் தமிழகம், கர்நாடகா என இரு மாநிலங்களுக்கும் பயன் உண்டு. மேகதாது அணை குறித்து இரு மாநிலப் பிரதிநிதிகளும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம்'' என எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதியுள்ள பதில் கடிதம் மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேச நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தைச் சந்தித்துப் பேச டெல்லி செல்வதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் துரைமுருகன் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். டெல்லி செல்லும் அவர் நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் புதியதாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்தவுள்ளார். தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடகம் அணை கட்டியது குறித்தும் தமிழகத்தின் ஆட்சேபனையை துரைமுருகன் தெரிவிப்பார் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 mins ago
இந்தியா
7 mins ago
இந்தியா
46 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
59 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
3 hours ago