வாகனச் சோதனையின்போது மக்களை தாக்கினால் நடவடிக்கை: போலீஸாருக்கு டிஜிபி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

வாகனச் சோதனையின்போது மக்கள் மீது தாக்குதல் நடத்தும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி எச்சரித்துள்ளார்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சாலைகளில் தடுப்பு கள் அமைத்து போலீஸார் கண் காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து முக்கிய சாலைகளில் மட்டும் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

இதற்கிடையே சமீபத்தில் வாகன சோதனையின்போது, மதுஅருந்தியிருந்த ஒருவர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதில் அவர்உயிரிழந்தார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் போலீஸார்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

சுற்றுச்சூழல்

18 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

13 mins ago

விளையாட்டு

34 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்