புதுச்சேரியில் 251 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 3 பேர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (ஜூன் 20) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 8,414 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-200, காரைக்கால்-31, ஏனாம்-8, மாஹே-12 என, மொத்தம் 251 (2.98 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்கால், ஏனாம், மாஹேவில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,723 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.50 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 847 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மருத்துவமனைகளில் 583 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,979 பேரும் என, மாநிலம் முழுவதும் மொத்தம் 3,562 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக 479 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9,562 (95.19 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 12 லட்சத்து 26 ஆயிரத்து 189 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 10 லட்சத்து 53 ஆயிரத்து 794 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என, மொத்தம் 4 லட்சத்து 5,784 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

வணிகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்