அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சென்னை, கோவை மண்டலம் திருத்தியமைப்பு: ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சென்னை, கோவை மண்டலங்கள் நிர்வாக வசதிக்காக திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் அஸ்பயர்கே.சுவாமிநாதன், தான் வகித்துவரும் பொறுப்பில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தன்னைவிடுவிக்குமாறு வைத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இன்றுமுதல் விடுவிக்கப்படுகிறார்.

தகவல் தொழில்நுட்பப் பிரிவின்நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு ஏற்கெனவே செயல்பட்டு வரும் சென்னை, கோவை மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்கள் இன்றுமுதல் பின்வருமாறு திருத்தி அமைக்கப்பட்டு செயல்படும்.

சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்கள்: வட சென்னை வடக்கு (கிழக்கு மற்றும் மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு மற்றும் மேற்கு), தென் சென்னை வடக்கு (கிழக்கு மற்றும் மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு மற்றும் மேற்கு),சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மற்றும்மேற்கு, திருவள்ளூர் (வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு) என திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்கள்: கோவை மாநகர், கோவை புறநகர் வடக்குமற்றும் தெற்கு, திருப்பூர் மாநகர்,திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும்மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடுபுறநகர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்கிழக்கு மற்றும் மேற்கு, கடலூர்கிழக்கு, மத்தியம் மற்றும் மேற்குஎன்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பொறுப்பில் அதிமுக செய்தித் தொடர்பாளர் எம்.கோவை சத்யன் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்