தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் ரூ.11,500 கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறை சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன் ,அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள், 4 மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:
தமிழகத்தில் பொற்கால ஆட்சியை அமைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு பயிர் கடன்களை வழங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்து, அவர்களுக்கும் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையா உரம் இருப்பில் உள்ளது.
ரேஷன் கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் கரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் முதல் தவணையாக 99 சதவிகிதம் பேருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. தற்போது 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கருப்பு, பழுப்புநிற மற்றும் சேதமடைந்த அரிசியை ரேஷன் கடைகளில் வழங்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குழு கடன்கள் மட்டுமல்லாமல் தனி விவசாயிகளுக்கும் கடன்கள் வழங்க கூட்டுறவு கடன் சங்கங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ரூ.11,500 கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் தேவையான இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சீனி பெறும் குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றவும், புதிதாக ரேஷன் அட்டைகளை வழங்கவும் உணவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
வெற்றிலை விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகள் அல்லாதோருக்கு கடன் வழங்கப்பட்டதாக எழுப்பப்பட்டுள்ள புகார்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
3 mins ago
சினிமா
8 mins ago
இந்தியா
29 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago