தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக் கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வடக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி, ஒடிசா மற் றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவி வருகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற கூடும்.
இதன் காரணமாக தமி ழகத்தில் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக் கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஓரிரு மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.
வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வரும் 14-ம் தேதி வரையும், தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் 15-ம் தேதி வரையும் பலத்த காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக் கூடும். கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளில் வரும் 16-ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
40 mins ago
சுற்றுச்சூழல்
50 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
45 mins ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
3 hours ago