மதுரை மாநகராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர் சித்திரைவேல். அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட இவர், அண்மையில் செய்தித் துறை உதவி இயக்குநராக பதவி உயர்வு கிடைத்த போதும் சொந்த மாவட்டம் என்பதால் மதுரை மாநகராட்சியிலேயே பணியைத் தொடர்ந்தார். இந்த நிலையில் ஆட்சி மாறியதுமே காத்திருப்போர் பட்டியலுக்கு நகர்த்தப்பட்டார் சித்திரைவேல். அவருக்குப் பதிலாக, அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலத்தில் பிஆர்ஓ-வாக இருந்த மகேஷ்வரன் உடனடியாக மதுரை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் அணுக்கத் தோழர் தான் இந்த மகேஷ். இதைவைத்து, “அண்ணனோட சிபாரிசில் தான் மகேஷ் மதுரைக்கு வந்துருக்காரு” என்று அறிக்கை வாசிக் கிறார்கள் அஞ்சா நெஞ்சரின் அடிப்பொடிகள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
விளையாட்டு
12 hours ago
சினிமா
13 hours ago
இந்தியா
13 hours ago