மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு பணிக்கு வருவதிலிருந்து விலக்கு: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கும் நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, கடந்த 6-ம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்து அரசு ஆணையிட்டது.

மாநிலம் முழுவதும் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி காலை 6 மணி வரை நீீட்டித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் ஏற்கெனவே கடந்த 6-ம் தேதி வரை அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து உள்ளதை மேலும் நீட்டிப்பு செய்து, வரும் 13-ம் தேதி வரை மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்