புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 1,445 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் இறப்பு விகிதம் 1.40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (மே. 22) வெளியிட்டுள்ள தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,092 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 1,140, காரைக்காலில் 203, ஏனாமில் 75, மாஹேவில் 27 என மொத்தம் 1,445 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 22 பேர், காரைக்காலில் 4 பேர், ஏனாமில் 4 பேர் என மொத்தம் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் 15 ஆண்கள், 15 பெண்கள் அடங்குவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325 ஆகவும், இறப்பு விகிதம் 1.40 ஆகவும் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 94 ஆயிரத்து 612 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,112 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 15,228 பேரும் என மொத்தம் 17 ஆயிரத்து 340 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 2,011 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 947 (79.36 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 9 லட்சத்து 71 ஆயிரத்து 544 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 8 லட்சத்து 50 ஆயிரத்து 822 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 301 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’
இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
57 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
2 hours ago