புதுச்சேரியில் 90 ஆயிரத்தைக் கடந்த கரோனா; புதிதாக 1,957 பேர் பாதிப்பு: 28 பேர் உயிரிழப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 1,957 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (மே 20) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,347 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 1,560, காரைக்கால் – 234, ஏனாம் – 125, மாஹே – 38 என மொத்தம் 1,957 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 25 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 2 பேர் என 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,269 ஆகவும், இறப்பு விகிதம் 1.39 ஆகவும் அதிகரித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 91 ஆயிரத்து 465 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,107 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 16,170 பேரும் என மொத்தம் 18 ஆயிரத்து 277 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 1,304 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 919 (78.63 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 9 லட்சத்து 53 ஆயிரத்து 154 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 900 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 313 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்