புதுச்சேரியில் புதிதாக 1,942 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (மே. 13) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,292 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் புதுச்சேரியில் 1,550 பேருக்கும், காரைக்காலில் 227 பேருக்கும், ஏனாமில் 123 பேருக்கும், மாஹேவில் 42 பேருக்கும் என மொத்தம் 1,942 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 18 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேவில் ஒருவர் என 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,069 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.35 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 78 ஆயிரத்து 973 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 2,203 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 14,365 பேரும் என மொத்தமாக 16,568 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 912 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 336 (77.67 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 8 லட்சத்து 89 ஆயிரத்து 507 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 654 பரிசோதனைகள் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.
மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 935 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
43 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago