விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத நபருக்கு இறுதிச்சடங்கு செய்த போலீஸாரின் மனிதநேயம்

By செய்திப்பிரிவு

குஜிலியம்பாறை அருகே விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத நபரை பிரேதப் பரிசோதனைக்குப் பின் முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்து போலீஸார் அடக்கம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே பாளையம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் வேடசந்தூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து குஜிலியம்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், இறந்த நபர் குறித்த எந்த விவரமும் தெரியவில்லை.

இதையடுத்து இறந்த நபரின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், இன்ஸ்பெக்டர் சத்யபிரபா ஏற்பாட்டின் பேரில் முதன்மைக் காவலர் அழகுராஜா இறந்தவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தி தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் அடக்கம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்