விவேக் உடல் நிலை, கரோனா, தடுப்பூசி குறித்து சர்ச்சைப் பேச்சில் சிக்கிய வழக்கில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனுவை செசன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளார்.
நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். மறுநாள் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் மக்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து அவர் மீது சென்னை மாநகராட்சி சார்பில் 10-வது மண்டல சுகாதார அலுவலர் பூபேஷ் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுகாதார அலுவலர் பூபேஷ் புகார் அளித்தார், தான் சென்னை மாநகராட்சி மண்டலம் 10-ல் சுகாதார அலுவலராகப் பணிபுரிந்து வருவதாகவும். நடிகர் மன்சூர் அலிகான், நெஞ்சு வலி காரணமாக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் உடல் நலன் குறித்து விசாரிக்க வந்தார்.
அந்த நேரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் அரசிற்கும், மருத்துவ அறிவியலுக்கும் எதிராக அவதூறுச் செய்திகளை வெளியிட்டு பொதுமக்களிடையே கரோனா பெரும் தொற்று என்று இல்லாத ஒன்றை இருப்பதாக அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்றி வருவதாகக் கூறினார். யாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும், இதயத்தில் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவேக் தடுப்பூசி காரணமாகத்தான் இந்த நிலைமைக்குச் சென்றார் என்ற அவதூறு செய்தியை பேட்டியில் தெரிவித்தார்.
எனவே, மன்சூர் அலிகானின் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் IPC 153 (கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல்), 270 (தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல்), 505(1),(b) (சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல்), தொற்றுநோய் தடுப்புச் சட்டம் (Section 3 of Epidemic Deceased Act - 1897), பேரிடர் மேலாண்மைச் சட்டம் (Section 54 of the Disaster Management t Act - 2005) குற்ற வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
அவரது மனுவில், எனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டார், உள்நோக்கத்தோடு வேண்டும் என்றே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை. எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, அதே போல, கரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை”. என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
12 mins ago
இந்தியா
6 mins ago
தமிழகம்
23 mins ago
வாழ்வியல்
14 mins ago
இந்தியா
28 mins ago
தமிழகம்
49 mins ago
சினிமா
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago