கடலூர் தாழக்குடா பகுதியில் மீனவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை நடந்தி வருகின்றனர்.
கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்தவர் மீனவர் சுப்ரமணியம் (63). இவருக்கு 2 மனைவிகள். 2 மனைவிகளும் உயிரிழந்து விட்டனர். முதல் மனைவிக்கு 2 ஆண், 2 பெண். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. இரண்டாவது மனைவியின் மகள் இந்துமதியும், சுப்ரமணியனனும் ஒன்றாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் வரும் 26ம் தேதி இந்துமதிக்கு நிச்சயதார்த்தம் செய்ய சுப்ரமணியன் ஏற்பாடு செய்திருந்தார். நேற்று(ஏப்.22) தேவனாட்பட்டினத்தில் உள்ள முதல் மனைவியின் மகள் தமிழ்ச்செல்வியிடம் நிச்சயதார்த்த செலவுக்கு ரூ 10 ஆயிரம் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று (ஏப்.23) சுப்ரமணியம் மூக்கில் நுரை தள்ளிய நிலையில் காலில் சிறு காயங்களுடன் தாழுங்குடா பகுதியில் உள்ள கண்டக்காடு என்ற இடத்தில் புத்துகோவில் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தந்தனர் சம்பவ இடத்துக்கு சென்ற தேவனாம்பட்டினம் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியன் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago