செந்துறை அருகே ரவுடி வெட்டிக் கொலை: 3 பேர் கைது

By பெ.பாரதி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் நேற்றிரவு (ஏப் 18) கைது செய்தனர்.

செந்துறை அருகேயுள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி(44). இவர் மீது, தளவாய், செந்துறை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழிபறி, அடிதடி தகராறு என 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ரவுடியாக வலம் வந்த இவர் புதுப்பாளையத்தில் இருந்து இடையக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள முந்திரி தோட்டத்தில், நேற்றிரவு மதுபோதையில் படுத்து தூங்கி உள்ளார்.

இதனைக் கண்ட நிலத்தின் உரிமையாளர் தர்மராஜ்(52) எழுந்து செல்லும் படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி, தான் வைத்திருந்த அரிவாளால் தர்மராஜை வெட்டி உள்ளார். இதனைக் கண்ட தர்மராஜின் உறவினர்கள், கொளஞ்சியை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.

இதில் கொளஞ்சி அதே இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தர்மராஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீஸார், தர்மராஜ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தர்மராஜின் உறவினர்கள் லோகேஷ்வரன், சக்திவேல், பிரபாகரன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்