வானில் பறக்கும் இ-டாக்ஸி சென்னை ஐஐடி வடிவமைப்பு: ஜூலையில் சோதனை ஓட்டம்

By செய்திப்பிரிவு

பேட்டரியில் இயங்கக்கூடிய பறக்கும் இ-டாக்ஸியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பறக்கும் டாக்ஸியை வடிவமைக்க சென்னை ஐஐடி திட்டமிட்டது. அதற்காக ‘தி இ-பிளேன் கம்பெனி’ (The ePlane Company) என்ற புதிய நிறுவனத்தை கடந்த ஆண்டு நிறுவியது. இந்நிலையில், மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் பறக்கும் இ-டாக்ஸியை ஐஐடி வடிவமைத்துள்ளது.

இதுகுறித்து பேராசிரியரும், இ-பிளேன் நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான சத்ய சக்கரவர்த்தி கூறியதாவது:

சிறிய விமான வடிவிலான இ-டாக்ஸியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் இதில் 2 பேர் பயணிக்க முடியும். இந்த இ-டாக்ஸி சுமார் 200 கிலோ அளவிலான எடையை சுமந்தபடி மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

இ-டாக்ஸி சோதனை ஓட்டம் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டில் முழு வடிவம் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லதயாராகிவிடும். இது நடைமுறைக்கு வரும்போது, வழக்கமான கால்டாக்ஸியைவிட 2 மடங்குமட்டுமே வாடகை அதிகம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்