கோவில்பட்டி அருகே குளத்தில் வீசப்பட்ட கோயிலின் செம்பு கலசம் குறித்து போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் சாலைக்குளம் உள்ளது. தற்போது இந்த குளத்தில் தண்ணீர் உள்ளது.
நேற்று காலை கோயில் கலசம் குளத்தின் கரையோரம் ஒதுங்கி கிடந்தது. அந்த வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து, கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் வந்து கலசத்தை மீட்டு, நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் ஒப்படை த்தார். அந்த கலசம் செம்பால் செய்யப்பட்டது. அதில் கல்லைக்கட்டி குளத்தில் வீசியுள்ளனர். இந்த கலசம் எந்த கோயிலுக்கு சொந்தமானது என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago