தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத் தைச் சேர்ந்த ரெங்கசாமி என்ப வரது மகன் வேல்முருகன் (25). கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன். இவரது மகள் ரஞ்சனியும்(20), வேல் முருகனும் காதலித்து பெற்றோர் சம்மதமில்லாமல் கடந்த மாதம் திருமணம் செய்துள்ளனர்.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்து இருவரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பினர். இதனால் வேல்முருகன் விஷம் குடித்துவிட்டார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நலம் விசாரிப் பது போல வந்த ரஞ்சனி யின் அண்ணன் விஜய், வேல்முருகனை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த வேல் முருகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின் றனர். இது குறித்து விஜய், வரதராஜன், ஆதிநாராயணா, செந்தில், அஜித், ராஜேஷ், பாக்கியராஜ், ஜெயராமன், சரவணன் ஆகிய 9 பேர் மீது க.விலக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago