அனைத்து பிரிவு போலீஸாரும் தேர்தல் பணியாற்ற டிஜிபி உத்தரவு

By செய்திப்பிரிவு

சிபிசிஐடி, சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு உட்பட அனைத்து பிரிவுபோலீஸாரும் தேர்தல் பணியில்ஈடுபட வேண்டும் என்று டிஜிபிஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள் ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்வருகிற 6-ம் தேதி நடைபெறுகிறது. அதை முன்னிட்டு போலீஸார் அனைவரும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் போலீஸார் உள்ளனர். இதில்காவல் நிலைய பணி, அத்தியாவசிய விடுப்பில் இருப்பவர்கள் கழித்துசுமார் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், மத்திய துணை ராணுவப்படை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற போலீஸார், ஊர்க்காவல் படையினர் ஆகியோரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீஸார் தேவைப்படுவதால், சிபிசிஐடி, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு, மது விலக்கு பிரிவு, சைபர்கிரைம், பொருளாதார குற்றப்பிரிவு, குடிமைப்பொருள் பிரிவுஉட்பட அனைத்து பிரிவு போலீஸாருக்கும் தேர்தல் பாதுகாப்பு பணி வழங்க டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். ஏப். 6-ம் தேதி அனைத்து பிரிவு போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 mins ago

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

மேலும்