தொடர்ந்து 3-வது முறையாக அதிமுக ஆட்சி: அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.காமராஜ் வலங்கைமான் ஒன்றியத்தில் அனியமங்கலம், கோவிந்தகுடி, இனாம்கிளியூர், நல்லூர் அன்னுக்குடி உள்ளிட்ட இடங்களில் நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் ஆர்.காமராஜ் கூறியது: நன்னிலம் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றியுள்ளேன்.

குறிப்பாக, ஏழை, எளிய மக்களை கொண்ட நன்னிலம் தொகுதியில் மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் 2 அரசு கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியன கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால், 3-வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் நன்னிலம் தொகுதியில் விவசாய கழிவு பொருட்களை கொண்டு புதிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்