தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று மாலை ராமேசுவரம் வந்தார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தொடர்ந்து மதுரை வந்து தனி ஹெலிகாப்டர் மூலம் விருதுநகர் சென்று பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பின்னர் ஹெலிகாப்டரில் மாலையில் மண்டபம் முகாம் தளத்தில் வந்திறங்கிய உ.பி. முதல்வர் அங்கிருந்து கார் மூலம் பாம்பன், தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்து சிறப்பு ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொண்டார்.
இன்று (வியாழக்கிழமை) அதி காலை ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க தரிசனம் செய்கிறார். தொடர்ந்து அக்னி தீர்த்தக் கடலிலும், 22 தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் கார் மூலமாக தனுஷ்கோடி செல்ல உள்ளார். உ.பி. முதல்வர் வருகையை யொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
14 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
44 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
55 mins ago
வாழ்வியல்
46 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago