புதுச்சேரியில் புதிதாக 127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,468 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (மார்ச் 31) வெளியிட்டுள்ள தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,132 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 76 பேருக்கும், காரைக்காலில் 43 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என மொத்தம் 127 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 682 ஆகவும், இறப்பு விகிதம் 1.64 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரையில் 41 ஆயிரத்து 468 பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 294 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 780 பேரும் என மொத்தம் 1,074 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 64 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 712 (95.77 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 6 லட்சத்து 71 ஆயிரத்து 689 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 922 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. இதுவரை 68 ஆயிரத்து 462 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’
இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
7 mins ago
தமிழகம்
9 mins ago
சினிமா
14 mins ago
கருத்துப் பேழை
49 mins ago
இந்தியா
17 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago