புதுச்சேரியில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,468 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (மார்ச் 31) வெளியிட்டுள்ள தகவல்:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,132 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 76 பேருக்கும், காரைக்காலில் 43 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என மொத்தம் 127 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 682 ஆகவும், இறப்பு விகிதம் 1.64 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரையில் 41 ஆயிரத்து 468 பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 294 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 780 பேரும் என மொத்தம் 1,074 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 64 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 712 (95.77 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 6 லட்சத்து 71 ஆயிரத்து 689 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 922 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. இதுவரை 68 ஆயிரத்து 462 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

7 mins ago

தமிழகம்

9 mins ago

சினிமா

14 mins ago

கருத்துப் பேழை

49 mins ago

இந்தியா

17 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்