நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி அதிமுக எம்.பி.க்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மக்களவை துணைத் தலை வர் மு.தம்பிதுரை, நாடாளு மன்ற அதிமுக குழு தலைவர் பி.வேணுகோபால், மாநிலங் களவை குழுத் தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணன், மக்களவை குழு துணைத் தலைவர் பி.குமார், கொறடா எஸ்.ஆர்.விஜயகுமார், மாநிலங்களவை குழு கொறடா எல்.சசிகலா புஷ்பா உள் ளிட்ட எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டனர்.
குளிர்கால கூட்டத்தொடரில் எப்படி நடந்துகொள்ள வேண்டும். மத்திய அரசால் கொண்டு வரப்படும் மசோதாக்கள் மீது அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அவர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக வெள்ள நிவாரணப் பணிகள், ஏற்கெனவே பிரதமரிடம் ஜெயலலிதா கொடுத்துள்ள கோரிக்கைகள் குறித்து இரு அவைகளிலும் எம்.பி.க்கள் பேச வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago