சென்னை மாவட்டத்தில் தேர்தல் செலவினம் தொடர்பாக, தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதிகளுக்காக 12 தேர்தல் செலவின பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர்கள் அனைவரும் சென்னை வந்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தலைமையில் 13-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செலவின பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
அக்கூட்டத்தில் தேர்தலை வெளிப்படைத் தன்மையுடன் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. 12 செலவின பார்வையாளர்களுக்கான தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதி - எஸ்.அனில் குமார் (8925515011), பெரம்பூர் - ராஜூர் சதீஷ்சந்திரா (8925515012), கொளத்தூர்- மஷார் அக்ரம் (8925515013), வில்லிவாக்கம் 15. திரு.வி.க.நகர்-டி.கிரண், (9591016550), எழும்பூர்-அனிஸ் கான் (8925515015), ராயபுரம் - சதீஷ் ( 8925515016), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - வி.ஆர்.ஹரி (8925515017), ஆயிரம் விளக்கு- எம்.ஹிரமத் பசாவ்ராஜ் (8925515018), அண்ணாநகர்- அபிஷேக் கெளதம் (8925515019), விருகம்பாக்கம் - உனவேக்கர் கிரண் பஞ்சாம்ராம் (8925515020), சைதாப்பேட்டை , தியாகராய நகர்- துருவ் புராரி சிங் (8925515021), மயிலாப்பூர், வேளச்சேரி - ஷில் அசீஷ் (8925515022) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கைப்பேசி மூலம்...
இவர்கள் மார்ச் 12-ம் தேதி முதல் தேர்தல் செலவின பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தங்கள் தொகுதியில் நடைபெறும் தேர்தல் செலவினம் தொடர்பான புகார்களை, செலவின பார்வையாளர்களிடம் கைபேசி வழியாக தெரிவிக்கலாம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
2 hours ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வேலை வாய்ப்பு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago