முடிவுக்கு வந்தது திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இழுபறி: 6 தொகுதிகள் ஒதுக்கீடு எனத் தகவல்

By செய்திப்பிரிவு

திமுக கூட்டனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும், இரு கட்சிகளுக்கு இடையேயும் இன்று காலை 11 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் அக்கட்சி ஒதுக்கிய தொகுதிகளை எற்றுக் கொண்டுள்ளன.

25 தொகுதிகளை காங்கிரஸும், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளையும் பெற்றுக்கொண்டன.

அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறுவதை தடுக்க ஒரே வழி திமுகவுடன் கூட்டணி வைப்பது மட்டும்தான் என்ற முடிவுக்கு கூட்டணி கட்சிகள் வந்ததால் கூட்டணிக் கட்சிகள் பெரிதும் பேரமின்றி வழங்கப்பட்ட தொகுதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் திமுகவுடன் தொடர்ந்து பிடிவாதமாகப் பேசி வந்தது. கூட்டணியில் விரிசல் ஏற்படாமல் திமுக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுக வழங்கு 6 தொகுதிகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இன்று காலை 11 மணியளவில் இரு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவுடன் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்