வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை ரத்து செய் யக்கோரி அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பினர் சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் அலு வலகம் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இது குறித்து அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பின் ஆலோசகர் விஜயகுமார் கூறியதாவது: மிக வும் பின்தங்கியோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர் களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்துள்ளது, சீர்மரபினர் மற்றும் பிற மிகவும் பின்தங்கிய சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை ரத்துசெய்ய வேண்டும்.
சீர்மரபினர் சமூகத்துக்கு டிஎன்டி என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும், மறவர் சீரமைப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மறவர் நலக்கூட்டமைப்புத் தலை வர் சண்முகசாமி, துணைத் தலை வர் மயில்மணி பாண்டியன், மற வர் அறக்கட்டளை முருகேசன், பொதுச்செயலாளர் சுப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
கருத்துப் பேழை
9 mins ago
சினிமா
2 hours ago
கல்வி
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago