ரயில் விபத்து மரணங்கள் 57 சதவீதம் குறைந்துள்ளன: ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரயில்விபத்து மரணங்கள் 57 சதவீதம்குறைந்துள்ளதாக ரயில்வே டிஜிபிசைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-ம் ஆண்டு ரயில்வே காவல் துறையில் 1,129 ரயில் விபத்துவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே 2018-ல் 2,502வழக்குகளும், 2019-ல் 2,600 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ரயில் விபத்து மரணங்கள் 57 சதவீதம் குறைந்துள்ளன. விபத்து மற்றும் விபத்து மரணங்கள் குறைவுக்கு கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் ஒரு காரணமாக இருந்தாலும் 57 சதவீதம் குறைவுக்கு அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது.

பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள், பணியாளர்கள் ரயில்கள், மருந்து பொருட்களை ஏற்றிச்சென்ற ரயில்கள் மற்றும் சோதனைஓட்ட ரயில்கள் பொது முடக்க காலத்திலும் இயக்கப்பட்டன. எனவே, 57 சதவீத விபத்து மரணங்கள் குறைந்ததற்கு ரயில்வே காவல் துறை மேற்கொண்ட சீரிய முயற்சிகளும், அதிகப்படியான மற்றும் தரமான விழிப்புணர்வு பிரச்சாரங்களுமே காரணம். இந்தநடவடிக்கைகள் வரும் மாதங்களி லும் தொடரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

சுற்றுச்சூழல்

17 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

12 mins ago

விளையாட்டு

33 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்