தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரயில்விபத்து மரணங்கள் 57 சதவீதம்குறைந்துள்ளதாக ரயில்வே டிஜிபிசைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2020-ம் ஆண்டு ரயில்வே காவல் துறையில் 1,129 ரயில் விபத்துவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே 2018-ல் 2,502வழக்குகளும், 2019-ல் 2,600 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ரயில் விபத்து மரணங்கள் 57 சதவீதம் குறைந்துள்ளன. விபத்து மற்றும் விபத்து மரணங்கள் குறைவுக்கு கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் ஒரு காரணமாக இருந்தாலும் 57 சதவீதம் குறைவுக்கு அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது.
பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள், பணியாளர்கள் ரயில்கள், மருந்து பொருட்களை ஏற்றிச்சென்ற ரயில்கள் மற்றும் சோதனைஓட்ட ரயில்கள் பொது முடக்க காலத்திலும் இயக்கப்பட்டன. எனவே, 57 சதவீத விபத்து மரணங்கள் குறைந்ததற்கு ரயில்வே காவல் துறை மேற்கொண்ட சீரிய முயற்சிகளும், அதிகப்படியான மற்றும் தரமான விழிப்புணர்வு பிரச்சாரங்களுமே காரணம். இந்தநடவடிக்கைகள் வரும் மாதங்களி லும் தொடரும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
சுற்றுச்சூழல்
17 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
12 mins ago
விளையாட்டு
33 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago