பாணாவரத்தில் ரவுடி கொலை

By செய்திப்பிரிவு

பாணாவரம் அருகே ரவுடியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தன்(34). பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர் மீது திருத்தணி, அரக்கோணம், பாணாவரம், ஆர்.கே.பேட்டை, தக்கோலம், சோளிங்கர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்று மாலை5 மணியளவில் தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க இரு சக்கர வாகனத்தில்பாணாவரம் அரசு மேல்நிலைப் பள்ளி வழியாக நித்தியானந்தன் வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே காரில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள், நித்தியானந்தன் வாகனத்தின் மீது மோதி அவரை நிலை குலைய செய்தனர். பின்னர், மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர்.

இதில், நித்தியானந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பாணாவரம் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி தலை மையிலான காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.பிறகு நித்தியானந்தனின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக் காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யாரென விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணாமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

24 mins ago

சுற்றுச்சூழல்

34 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

29 mins ago

விளையாட்டு

50 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்