பாலமேடு அருகே இறந்த கோயில் காளைக்கு அஞ்சலி

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் இறந்த கோயில் காளைக்கு கிராமத்தினர் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.

சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் உள்ள சின்னம்மன் கோயிலுக்கு கிராமத்தினர் சார்பில் கோயில் காளை வளர்க்கப்பட்டது.

இக்காளை அலங்காநல்லூர், பாலமேடு உட்பட பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி களில் பங்கேற்று தங்கம், வெள்ளி பரிசுப் பொருட்கள் பெற்று ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளது.

இந்நிலையில் கோயில் காளை உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தது. அதற்குப் பெண்கள், இளைஞர்கள் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறந்த கோயில் காளையை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், கோயில் காளை ஊருக்குள் செல்லப் பிள்ளையாக வலம் வந்தது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று எங்கள் கிராமத்துக்குப் பெருமையை தேடித்தந்தது.

திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்