கன்னியாகுமரியில் பறவைகள் கணக்கெடுப்பு: கடந்த ஆண்டைவிட 35 சதவீத பறவைகள் குறைவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பிப்ரவரி மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது.

தேரூர் குளம், சுசீந்திரம் குளம், மாணிக்க புத்தேரிகுளம், புத்தளம் உப்பளம், சுவாமித்தோப்பு, ராஜாக்கமங்கலம் காயல்,தத்தையார்குளம் ஆகிய இடங்களில் நேற்று கணக்கெடுப்பு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டவன அலுவலர் அசோக்குமார் தலைமையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன், பறவை ஆர்வலர்கள் டேவிட்சன், ராபர்ட் கிராப்,ஹெர்பட் கிங்ஸ்லி ஆகியோர் அடங்கிய 7 குழுவினர் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் நாளிலேயே பறவைகள்ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட ஈரநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது 4 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் தென்பட்டன. ஆனால் நேற்று1,500 பறவைகளுக்குள் மட்டுமேபார்க்க முடிந்தது. இது கடந்தஆண்டைவிட 35 சதவீதம் குறைவுஎன, கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டு பறவைகள்மட்டுமின்றி, உள்நாட்டு பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

பறவைகள் ஆர்வலர் டேவிட்சன் கூறும்போது, “ எந்த ஆண்டும் இல்லாத வகையில் உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கன்னியாகுமரி மாவட்ட ஈரநிலங்களில் குறைந்துள்ளன. 35 சதவீதத்துக்கும் மேல் பறவைகள் வரத்துகுறைந்திருப்பது, சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

நீர்நிலைகள் மாசடைவது, நீர்நிலைகளில் மனித தலையீடு அதிகரிப்பது, தட்பவெப்பம் மாற்றம் போன்றவைதான் பறவைகள் வசிப்பிடங்கள் குறைவதற்கும், இனப்பெருக்க மில்லாமல் போவதற்கும் காரணமாக உள்ளது. எனவே, நீர்நிலைகளை காத்துபறவைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

57 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

41 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

19 mins ago

மேலும்