இலங்கை மீனவர் 34 பேர் ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

ஆந்திரம், கர்நாடக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 34 பேர் நேற்று இலங்கை கடற் படையினரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்ததாகவும், திசைமாறி வந்ததாகவும் ஆந்திர மாநிலம் காக்கிநாடா சிறையில் 5 இலங்கை மீனவர் களும், கர்நாடக மாநிலம் மங்களுரு சிறையில் 29 இலங்கை மீனவர்களும் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

இருநாட்டு அரசுகளும் மேற்கொண்ட நல்லெண்ண நடவடிக்கைகளால் இலங் கையில் இருந்த இந்திய மீனவர்களும், இந்தியாவில் இருந்த இலங்கை மீனவர் களும் விடுதலை செய்யப்பட் டனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 34 பேரும் இலங் கைக்கு அனுப்பி வைப்பதற் காக நேற்று முன்தினம் இரவு காரைக்கால் அழைத்து வரப் பட்டனர்.

நேற்று காலை அவர்கள் கப்பல் மூலம் காரைக்காலில் இருந்து சர்வதேச கடல் எல் லைக்கு கொண்டு செல்லப் பட்டு இலங்கை அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

55 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்