புதுச்சேரியில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று: உயிரிழப்பு இல்லை

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 32 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (ஜன.26) தெரிவித்திருப்பதாவது:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,276 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-12, காரைக்கால்-3, ஏனாம்-2, மாஹே-15 என மொத்தம் 32 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழப்பு இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 645 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 910 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 109 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 186 பேரும் என மொத்தம் 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 17 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 970 (97.58 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 5 லட்சத்து 62 ஆயிரத்து 668 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 916 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்