இந்து சமய அறநிலையத் துறையின் சென்னை மண்டல அலுவலகத்தை இரண்டாக பிரித்து உத்தரவு

By செய்திப்பிரிவு

இந்து சமய அறநிலையத் துறைநேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்து சமய அறநிலையத் துறையில் சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகம் சென்னை-1, சென்னை-2 என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மண்டல இணை ஆணையர்-1 அலுவலக கட்டுப்பாட்டில் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அம்பத்தூர், அயனாவரம் ஆகிய வருவாய் வட்டங்களில் உள்ளகோயில்களும், சென்னை மண்டல இணை ஆணையர்-2 அலுவலக கட்டுப்பாட்டில் மயிலாப்பூர், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், கிண்டி, வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் வருவாய் வட்டங்களில் உள்ள கோயில்களும் வரும்.

சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகம் இதுவரை ஆணையர் அலுவலக வளாகத்தின் 2-ம் தளத்தில் செயல்பட்டுவந்தது. தற்போது இடப் பற்றாக்குறை காரணமாக இந்த 2 அலுவலகங்களையும் புதிய இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 இணை ஆணையர் மண்டலஅலுவலகங்களுக்கும் தனித்தனியே புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை மண்டல இணைஆணையர்-1 அலுவலகம் பாடி, யாதவாள் தெருவில் உள்ள வாடகை கட்டிடத்தில் செயல்படும். சென்னை மண்டல உதவி ஆணையர் அலுவலகமும் இங்குசெயல்படும்.

சென்னை மண்டல இணை ஆணையர்-2 அலுவலகம் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான பிள்ளையார் கோயில் தோட்டம் வணிக வளாக கட்டிடத்தில் செயல்படும். இந்த அலுவலகங்கள் வரும் 25-ம் தேதியில் இருந்து புதிய இடங்களில் செயல்படும்.

மேலும் விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்