மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்: விரைவில் பிரச்சாரத்துக்கு செல்வார் என தகவல்

By செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு, பல்வேறு பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், காலில் தொடர்ந்து வலி ஏற்பட்டு வந்ததால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 5 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து நேற்று பிற்பகல் வீடு திரும்பினார். குடும்ப உறுப்பினர்கள் கமல்ஹாசனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதனிடையே, கட்சியின் துணைதலைவர் மகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு ‘சீரமைப்போம் தமிழகத்தை' எனும் தேர்தல் பிரச்சார பயணத்தின் இரண்டாவது சுற்றை கமல்ஹாசன் தொடங்க இருக்கிறார்’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

இந்தியா

9 mins ago

க்ரைம்

6 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்