திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உருவாக்கம்: துரைமுருகன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி என்ற புதிய அணி திமுகவில் உருவாக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, துரைமுருகன் இன்று (ஜன. 08) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"திமுக சட்டதிட்ட விதி: 6, பிரிவு: 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும், திமுக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் திமுக சட்டதிட்ட விதி 31 - பிரிவு: 20-ன் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) நல அணி என்ற புதிய அணி அமைக்கப்படுகிறது.

அணிச் செயலாளர்: டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏ

இணைச் செயலாளர்கள்: செந்தில்குமார், எம்.பி.,

புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்".

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்