ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன்: மநீம தலைவர் கமல்ஹாசன் தகவல்

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம்திருமயம் அருகே கடியாபட்டியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசுவேன். அப்போது எனக்கு ஆதரவு கோருவேன். உடல் ஆரோக்கியத்தைக் காரணமாக வைத்து அவர் கட்சி தொடங்கவில்லை என்று முடிவு எடுத்திருந்தால் அந்தக் கருத்தில் உடன்படுகிறேன். வேறு காரணம் ஏதும் இருக்குமா எனத் தெரியவில்லை. பாலியல் வன்முறைகளுக்கு தீர்வு காண, அதற்கேற்ப கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நான் ஏற்கவில்லை.

தற்போது ஆட்சியில் இருப்பதால், தவறுகளைத் தடுக்க வேண்டும் என்பதால் அதிமுகவினரைபற்றி பேசி வருகிறேன். அதற்காக திமுக செய்த தவறுகளை ஏற்றுக் கொள்வதாக அர்த்தம் கிடையாது.

தமிழக மக்கள் பாஜகவை விரும்பவில்லை. என்னை மீண்டும் மீண்டும் பாஜகவின் ஒரு அணி என விமர்சிப்பதை எதிர்க்கிறேன். தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜனவரியில் கருத்து தெரிவிக்கிறேன். மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியையே எங்கள் கட்சியினர் விரும்புகின்றனர். அவர்களது கருத்துதான் எனது கருத்து என்றார். பின்னர், திருமயம் கடை வீதியில் கமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

க்ரைம்

41 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்