வன்னியருக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி சென்னையில் பாமக 3-வது நாளாக போராட்டம்

By செய்திப்பிரிவு

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சார்பில் சென்னையில் 3-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக, வன்னியர் சங்கம் சார்பில் டிச.1-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 1-ம் தேதி சென்னையில் மன்றோ சிலை அருகே போராட்டம் நடத்தப்பட்டது. 2-வது நாளாக சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், 3-வது நாளான நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பாமக தலைவர் ஜி.கே.மணி, வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

45 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

4 hours ago

மேலும்