எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும்: பிரச்சினைக்கு தீர்வு காண பொன்.ராதாகிருஷ்ணன் யோசனை

By செய்திப்பிரிவு

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தவிர்த்தால் மட்டுமே இரு நாட்டு மீனவர்களிடையிலான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், அவர்களது படகுகளை மீட்டுத் தர வேண்டுமென வலியுறுத்தி வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டுள்ள நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவர்களை அவர் நேற்று சந்தித்து, ஆறுதல் கூறினார்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட் டுள்ள நம்பியார் நகரைச் சேர்ந்த 37 மீன வர்களையும், அவர்களது 4 படகுகளை யும் மீட்டுத் தருமாறு அவரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு ஏற்படு வதையே மத்திய அரசு விரும்புகிறது.

இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தவிர்த்தால் மட்டுமே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

29 mins ago

உலகம்

44 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்