நடிகர் விவேக் மகன் மறைவுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இரங்கல்

By செய்திப்பிரிவு

நடிகர் விவேக் மகன் பிரசன்னகுமார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடிகர் விவேக்கிற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பிய இரங்கல் கடிதத்தில், ''தங்களின் மகன் பிரசன்னகுமார் 29-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். இதனால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் அளிக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பிரசன்னகுமாரை இழந்துவாடும் தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார் திடீரென்று மறைந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் விவேக் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.













VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்