விஷாலின் ‘சக்ரா’ படம்  ஓடிடியில் வெளியிடத் தடை கோரி வழக்கு: தற்போதைய நிலையே நீடிக்கும்; உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

'சக்ரா' திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30-ம் தேதி வரை நிறுத்திவைக்க வேண்டும் என விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதே நிலை தொடரும் என மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்‌ஷன்' என்ற படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ரூ.8.29 கோடியைத் திருப்பித் தருவதாகக் கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால், விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒரு கதையைச் சொல்லி அதைப் படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் 'சக்ரா' என்ற படத்தை இயக்குநர் ஆனந்தன் இயக்கி வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீஸரும் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டுமெனவும், 8.29 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அந்த மனுவில், ஏற்கெனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய 8.3 கோடி ரூபாய் பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிடவும் கோரியிருந்தனர். இதேபோல் தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்குத் தடை விதிக்கவும், உத்தரவாதத் தொகையாக 1 கோடி ரூபாயைச் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும் மற்றொரு வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருப்பதால் குறுகிய காலத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வழக்குகள் குறித்து செப்டம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் விஷாலுக்கும், இயக்குநர் ஆனந்தனுக்கும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் பென்டிரைவில் டிரெய்லரைத் தாக்கல் செய்தார். அதை நீதிபதி கணினியில் போட்டுப் பார்த்தார்.

படத்தின் விற்பனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், இறுதி செய்யப்படவில்லை என்றும் விஷால் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் தெரிவித்தார்.

இதையடுத்து, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார். அதுவரை, 'சக்ரா' திரைப்படத்தை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என ஸ்டேட்டஸ் கோ உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்