அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: நேரடி விசாரணைக்காக ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை நேரடி விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேஷ் மற்றும் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில், வழக்கு நிலுவையில் உள்ள வரை பத்திரிக்கை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தலங்களில் அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறப்போர் இயக்கம் சார்பில் காணொலி மூலமாக இல்லாமல் நேரடி விசாரணை மூலம் வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 24-ம் தேதி நேரடி முறையில் விசாரிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்