பாரத தேசத்தின் முன்னேற்றத்துக்காக, ஜாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் ஒரே நோக்குடன் செயல்பட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில், "தேசத்தின் சுதந்திரத்துக்காக ஏராளமானோர் தங்களது உயிரை அர்ப்பணித்துள்ளனர். ஜாதி, மதம்,மொழி, கட்சி மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் நாட்டில் பிரிவினைகளை உருவாக்க வேண்டாம். நமது மொழி, உணவு என அனைத்திலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. நாட்டில் பல மதங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சொத்தாகப் பார்க்க வேண்டும். பிரிவினையை உருவாக்கும் விஷயமாக கருதக்கூடாது. நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒரே நோக்குடன் செயல்பட வேண்டும்.
கரோனா வைரஸ் பாதிப்பு நிறைவு பெற்ற பிறகு, நம் நாடுபொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய மகத்தான வாய்ப்புகள் உள்ளன. வேறுபாடுகளைக் கடந்துசெயல்பட்டால், அடுத்த 10, 20 ஆண்டுகளில் சுமார் 50 கோடி மக்களின் வாழ்க்கைச் சூழலை உயர்த்த முடியும். மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
24 mins ago
சினிமா
40 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
52 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
50 mins ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago