சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்த டாக்டர் சத்யா(32) கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்ததாக டாக்டர் சத்யா தங்கியிருந்த குடியிருப்பிலேயே வசித்த திரிபுராவை சேர்ந்த ஹரிந்தம் தீப்நாத்(22) என்பவரை கீழ்ப்பாக்கம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். டாக்டர் சத்யா வைத்திருந்த அவரது கொலையில் ஏற்பட்டுள்ள பல சந்தேகங்களுக்கு இதுவரை விடை தெரியவில்லை.
இந்த கொலை வழக்கு குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இந்திய மருத்துவக் கழக மாநிலக் குழு உறுப்பினர் கருணாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். டாக்டர் சத்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும்போது இவரும் உடன் இருந்தார்.
சம்மன்
டாக்டர் சத்யா கொலை வழக்கு குறித்த விசாரணைக்கு வருமாறு கருணாகரனுக்கு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று காலையில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு கருணாகரன் சென்றார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
10 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago