சென்னை உயர் நீதிமன்றத்தை திறப்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து முடிவு
எடுக்கப்படும் என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உறுதி அளித்துள்ளார். வழக்கறிஞர் களின் பிற கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும், எனவும் உறுதி அளித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 4 மாதங்களாக உயர் நீதிமன்றம் திறக்கப்படாத சூழலில், நீதிமன்றத்தை திறந்து வழக்கமான முறையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பார் கவுன்சிலும், வழக்கறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.சுதா, செயலாளர் இரா.கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை நேற்று சந்தித்து உயர் நீதிமன்றத்தை திறக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:
வழக்கறிஞர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் இல்லை என்பதால் கரோனா காலகட்டத்தில் வழக்கறிஞர்களும், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மருத்துவக் காப்பீடு
எனவே, வழக்கறிஞர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். காணொலி காட்சியில் வழக்குகளை விசாரிப்பதால் வழக்கறிஞர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, விரைவில் உயர்நீதிமன்றத்தை திறந்து வழக்குகளை வழக்கமான முறையில் விசாரிக்க வேண்டும். வழக்குகளை விசாரிக்கும்போது வாய்தா வழங்க வேண்டும். உடனடியாக தள்ளுபடி செய்யக்கூடாது.
இவ்வாறு அதில் கோரப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து உயர் நீதிமன்றத்தை வழக்கமான முறையில் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், வழக்கறிஞர்களின் பிற கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும், எனவும் தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
42 mins ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago