மினா நகர் நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

By செய்திப்பிரிவு

சவுதி அரேபியா மினா நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தமிழக ஹஜ் யாத்ரீகர்களில் திருச்சி, மயிலாடுதுறை மற்றும் தென்காசியைச் சேர்ந்த 3 பேர் பலியானது தெரியவந்துள்ளது.

திருச்சி தென்னூர் அண்ணா நகர் சிவப்பிரகாசம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அமானுல்லா. ஜவுளிக்கடை உரிமையாளர். இவர், மனைவி ரெமிஜன்(51). மகள் நிஷா, மருமகன் அமானுல்லா ஆகியோருடன் மெக்கா சென்றார்.

இந்நிலையில், மினா நகரில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் முகமது அமானுல்லா குடும்பத்தினரும் சிக்கிக் கொண்டனர். அவர்களில், ரெமிஜன் மூச்சுத்திணறி உயிரிழந்தார். மற்ற 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து திருச்சியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி எம்.பி. குமார் நேற்று காலை ரெமிஜன் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த உறவினர் அப்துல் மஜீத் உள்ளிட்டோரிடம் ஆறுதல் தெரிவித்தார். ரெமிஜன் உடலை மெக்காவிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மயிலாடுதுறையை சேர்ந்தவர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வடகரை மதரசா தெருவைச் சேர்ந் தவர் சம்சுதீன்(60). துபாயில் பணி யாற்றிய இவர், சில ஆண்டுகளுக்கு முன் வடகரை திரும்பினார். இவரது மனைவி சம்சாத் பேகம். இவரது மகன்கள் சபீர் அகமது(26), ஷகீர்(24). இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில், சம்சுதீன், சம்சாத் பேகம் ஆகியோர், தமிழகத்தி லிருந்து ஹஜ் யாத்திரைக்குச் சென்ற கடைசிக் குழுவினருடன் சவுதி அரேபியா சென்றனர். மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, சம்சுதீன் உயிரிழந்தார். அவரது மனைவி சம்சாத் பேகம் உயிர் தப்பினார்.

இதுகுறித்து சம்சுதீனின் உறவி னர்கள் கூறும்போது, அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும் என தகவல் கிடைத்துள்ளது” என்றனர்.

முன்னாள் சார்பதிவாளர்

மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டபோது மினா நகரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, திரு நெல்வேலி மாவட்டம் தென்காசி அரிப்புக்காரத் தெருவைச் சேர்ந்த மைதீன்பிச்சையும்(65) உயிரிழந் தது உறுதியாகியுள்ளது. அவரது மனைவி ரெஜினா பேகம் (60) பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மைதீன்பிச்சை, கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த 1-ம் தேதி தனது மனைவி ரெஜினா பேகத்துடன், ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் யாத்திரைக்கு தென்காசியிலிருந்து புறப்பட்டார். நேற்று முன்தினம் கூட்டநெரிசலில் சிக்கி மைதீன் பிச்சை உயிரிழந் துள்ளார்.

இவருக்கு ரெசவு மைதீன் (40), சேக்முகமது அலி (38) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ரெஜினாபேகம் தன் கணவர் நின்ற இடத்திலிருந்து, சற்று தொலைவில் இருந்ததால் காயத்துடன் உயிர் தப்பியதாக தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்