இ-பாஸ் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் எச்சரித்துள்ளார்.
சென்னை திருவிக நகர் மண்டலத்தில் கரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருவிக மண்டலத்தில் இதுவரை 8 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டு அதில் 6 ஆயிரத்து 603 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். முதல்வர் பழனிசாமி வரும் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் கரோனா பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
தமிழகத்தில் சரியான காரணங்களின் பேரில் இ-பாஸ் வழங்கப்படுகிறது. தற்போது கரோனாதொற்றின் வீரியம் கட்டுக்குள்உள்ள நிலையில், மாவட்டத்துக்குள் இ-பாஸ் தேவையில்லை. வேறு மாவட்டத்துக்கு செல்லும்போது இ-பாஸ் கட்டாயம் வாங்கவேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
31 secs ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago