அதிமுகவுக்கு கிறிஸ்தவ கூட்டமைப்பு ஆதரவு

By செய்திப்பிரிவு

தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு நிறுவனர் பிஷப் ஆர்.பால்ராம மூர்த்தி சென்னையில் நிருபர்கள டம் புதன்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனித பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் 500 பேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. கிறிஸ்தவ சிறுபான்மை இளைஞர்கள், இளம் பெண்கள் சிறுபான்மை மேம்பாட்டு கழகம் மூலம் அதிக அளவு கடன் உதவி பெறும் வகையில் இந்த நிறுவனத்துக்கான மூலதனத்தை ரூ.8.5 கோடியாகவும், கடன் தொகையை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா தான்.

இவ்வாறு கிறிஸ்தவ மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்துவரும் காரணத்தினால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளி்த்து தமிழகம் முழுவதும் பிரச்சா ரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டமைப்பு நிர்வாகிகள் பிஷப் வேதா, பிஷப் பால்நடராஜ், பிஷப் சாது பீட்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

21 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்